Thursday, 23 February 2017

புரட்சித் தலைவி அம்மா பிறந்த நாளையொட்டி, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா தொண்டர்களுக்கு மடல் - எதிரிகளும், துரோகிகளும் அ.இ.அ.தி.மு.க.வையும், கழக அரசையும் வீழ்த்த நினைத்த நேரத்தில், அம்மாவின் ஆன்மா நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவதாக நெகிழ்ச்சி - கழகத்தைக் காத்து, கழக அரசை நிலைநிறுத்த பாடுபட சபதம் ஏற்போம் என அழைப்பு


"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்துடன், மக்கள் நலனுக்காகவே தவ வாழ்வு வாழ்ந்து, அருந்தொண்டாற்றி மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் 69-வது பிறந்ததின விழா, இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஏழை-எளிய மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை அளிக்குமாறும், அறுசுவை உணவு வழங்குமாறும், அம்மாவின் திருவுருவப் படங்களை பொதுமக்கள் பார்வைக்கு அலங்கரித்துவைத்து மலரஞ்சலி செலுத்துமாறும் கழகத் தொண்டர்களை, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார். அ.இ.அ.தி.மு.க.-வையும், கழக அரசையும் வீழ்த்த எதிரிகளும், துரோகிகளும் நினைத்த நேரத்தில், அம்மாவின் ஆன்மா நம்மோடு இருந்து வழிநடத்தி, அம்மாவின் அரசை நிலைநிறுத்தியிருப்பதாகவும், அம்மாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் வண்ணம் கழக அரசு செயல்படும் என்ற உறுதியோடு, அம்மாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா,
கழக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள மடலில், `அம்மா' என்று கோடானு கோடி மக்கள் பாசத்தோடு அழைத்து, தங்களுக்காக மண்ணுலகில் வந்துதித்த வானத்து தேவதை என்று போற்றிக் கொண்டாடிய நம் அன்புக்குரிய இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவுக்கு 69-வது பிறந்த நாள் - ஒவ்வொரு ஆண்டும் நாம் அனைவரும் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்த இந்த இனிய நாள், இந்த ஆண்டு இத்தனை சோதனை மிகுந்ததாக அமைந்திடும் என்று நாம் ஒருபோதும் எண்ணியதில்லை - ஆனாலும், காலத்தின் சுழற்சியில் இத்தகைய ஒரு வேதனையை நாம் சந்தித்துத் தீர வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். 

எத்தனை துயர் வந்தாலும், எத்தனை இடர் வந்தாலும் அவற்றை எதிர்த்து நின்று துணிவுடன் போராடி, தனது மதிநுட்பத்தால் வென்று காட்டும் வாழ்க்கையை வாழ்ந்து நமக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கியவர் நம் புரட்சித் தலைவி அம்மா - இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் இடர்மிகு சூழலை புரட்சித் தலைவி அம்மாவின் இதயம் கொண்டு வெற்றி காண்பது தான் அம்மாவுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் - தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு என்றும்; தான் வாழ்வதே மக்களுக்காகத் தான் என்றும்; `மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்றும் சித்தரித்து, நம்மிடையே வாழ்ந்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழாக்களில், கடந்த காலங்களில் நாம் எப்படி ஏழை, எளிய மக்களுக்காக கொடை உள்ளத்தோடு எண்ணற்ற நலத் திட்ட உதவிகளை வழங்கினோமோ அதைப் போலவும், இன்னும் அதைவிட கூடுதலாகவும் மக்களுக்கு இந்த ஆண்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கழகத்திற்கு வலுவூட்டும் செயல்களை செய்தும், புரட்சித் தலைவி அம்மாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில் நம்முடைய பணிகள் அமைந்திட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளை அன்போடு கேட்டுக் கொள்வதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாளில் அம்மா நம்மோடு இல்லையே என்ற எண்ணம் தன்னை மென்மேலும் துயரத்திற்கு உள்ளாக்குகிறது - 33 ஆண்டுகள் அவருடைய பிறந்த நாளை அவர் கூடவே இருந்து கொண்டாடிய தான், இந்த ஆண்டு அவர் நினைவாக தனிமையில் துயருற்று இருப்பதாகவும், தனது இதயமெல்லாம் அம்மாவின் நினைவே நிரம்பி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மகத்தான மக்கள் தலைவர் அம்மாவை ஒரு நொடி சந்தித்தவர் கூட வாழ்நாள் முழுவதும் அவரை நினைத்திருப்பார் - அத்தகைய ஆளுமையும், கள்ளமில்லா வெள்ளை உள்ளமும் படைத்த வள்ளலின் வாரிசு நம் அம்மா - காலமெல்லாம் அம்மா புகழ் பாடிய வண்ணம் நம்முடைய வாழ்நாள் இருந்திட வேண்டும் என்றுதான் ஒவ்வொரு நொடியும் தான் நினைப்பதாகவும், அம்மாவின் அன்பையும், பாசத்தையும், உழைப்பையும் எண்ணி எண்ணி வேதனைக் கண்ணீர் வடிப்பதாகவும் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அமைத்த ஆட்சிக்கு சோதனை ஏற்பட்டு திசை அறியாது கழக உடன்பிறப்புகள் கலங்கி இருந்த நேரத்தில் வழிகாட்டும் ஒளி விளக்காகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் வந்துதித்தார் நம் புரட்சித் தலைவி அம்மா - எதிரிகளும், துரோகிகளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கழக அரசையும் வீழ்த்த நினைத்த நேரத்தில், அம்மாவின் ஆன்மா நம்மோடு கூட இருந்து நம்மை வழிநடத்தி, மக்களுக்கான அரசாகத் திகழும் நம் அம்மாவின் கழக அரசை நிலை நிறுத்தி இருக்கிறது - இந்த அரசு, அம்மா தமிழக மக்களுக்காக மென்மேலும் நிறைவேற்ற நினைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, மக்கள் வாழ்வில் ஒளியேற்றி, எல்லோருக்கும் எல்லாமுமாய்த் திகழ்ந்து, அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்ற உறுதியோடு, புரட்சித் தலைவி அம்மாவின் 69-ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அமைந்திடட்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் - இயன்ற இடங்களில் எல்லாம் அம்மாவின் மனது போல, அறுசுவை உணவுகளை அன்னதானமாகச் செய்யுங்கள் - கழகத்தின் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கட்டும் - எல்லாவற்றையும் விட கழக உடன்பிறப்புகள் வாழும் இடங்களில் எல்லாம் நம் அம்மாவின் திருஉருவப் படங்களை அழகுற பொதுமக்கள் பார்வைக்கு வைத்து மலர் அஞ்சலி செலுத்துங்கள் என, கழகத் தொண்டர்களை சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார். 

கடந்த காலங்களில் ஒவ்வொரு பொதுக்குழுவிலும் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி நாம் அனைவரும் மகிழ்ந்தோம் - இந்த ஆண்டு அம்மாவின் நினைவோடு, அம்மாவின் திருஉருவப் படத்தின் முன் நின்று 'கழகத்தைக் காப்போம்', 'கழக அரசை நிலைநிறுத்தி மக்கள் பணியாற்றுவோம்', 'உங்கள் ஆன்மா என்றென்றும் எங்களுக்குத் துணை நிற்கட்டும்' என்று கைகூப்பி வணங்கி பிரார்த்தித்து, அம்மா பிறந்த நாளில் சபதம் ஏற்போம் என்றும் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா, தனது மடலில் குறிப்பிட்டுள்ளார்.

Monday, 13 February 2017

எத்தனை எதிரிகள் வந்தாலும் தொண்டர்கள் துணையுடன் கழகத்தை காப்பேன் - தொண்டர்களின் முழு ஆதரவுடன் அ.இ.அ.தி.மு.க. அரசு பதவியேற்று சட்டப்பேரவையில் அம்மாவின் திருவுருவப் படத்தை திறந்து வைப்போம் : போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடையே கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா உறுதி

எத்தனை எதிரிகள் வந்தாலும் தொண்டர்கள் துணையுடன் கழகத்தை காப்பேன் என்றும், தொண்டர்களின் முழு ஆதரவுடன் அ.இ.அ.தி.மு.க. அரசு பதவியேற்று சட்டப்பேரவையில் அம்மாவின் திருவுருவப் படத்தை திறந்து வைப்போம் என போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடையே கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா உறுதிபட தெரிவித்தார். 

போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று குவிந்திருந்த நிர்வாகிகள் மத்தியில் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா உரையாற்றினார். இதனையடுத்து, இல்லத்தின் வெளியே சாலை முழுவதும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற வந்த சின்னம்மாவை வாழ்த்து முழக்கமிட்டும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

கழக நிறுவனர் டாக்டர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் உடைந்த கழகத்தை ஒன்று சேர்க்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் அம்மாவின் நிழலாக இருந்து தாம் செயலாற்றியுள்ளதாகவும், 33 ஆண்டுகளாக பல சலசலப்புகளையும், சோதனைகளையும் கடந்தே தாம் வெற்றி கொண்டுள்ளதாகவும் தொண்டர்கள் மத்தியில் சின்னம்மா பேருரையாற்றினார். தொண்டர்களின் துணையுடன் அம்மாவின் அரசை அமைத்து அழகு பார்ப்போம் என்றும் சின்னம்மா உறுதிபட தெரிவித்தார்.

Friday, 10 February 2017

அ.இ.அ.தி.மு..க. அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து மதுசூதனன் நீக்கம் - கழக பொதுச்செயலாளர் சின்னம்மா அறிவிப்பு - புதிய அவைத் தலைவராக கே.ஏ. செங்கோட்டையன் நியமனம்

கழகத்தின் கொள்கைக் குறிக்கோள்களுக்கு, முரணான வகையில் செயல்பட்டதால் அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அப்பொறுப்பில் இருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கப்படுவதாக, கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக அவைத் தலைவர் திரு.இ.மதுசூதனன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா வெளியிட்டுள்ள மற்றொரு முக்கிய அறிவிப்பில், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், கழக அவைத் தலைவர் பொறுப்பில் திரு.கே.ஏ.செங்கோட்டையன் இன்றுமுதல் நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். 

கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Vivekanandan Krishnaveni Sasikala Cinnamma

Vivekanandan Krishnaveni Sasikala (born 1957), also known as Sasikala Natarajan, is an Indian politician who is the acting general secretary of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK). 

Cinnamma was a close aide of J. Jayalalithaa, the former Chief Minister of Tamil Nadu, who headed AIADMK from 1989 until her death in 2016. After Jayalalithaa's death, the party's general council unanimously appointed Cinnamma as the chief of AIADMK. Cinnamma Sasikala is proposed to become the next Chief Minister

General secretary of AIADMK

After Jayalalithaa's death in December 2016, the AIADMK general council unanimously appointed Cinnamma Sasikala as the party's general secretary.